Kniha Pinnu Chenchadai Ki. Va. Jagannathan

Pinnu Chenchadai

Jazyk: Tamilčina
Väzba: Brožovaná
Vydavateľ: Nilan Publishers
Dostupnosť: Skladom u dodávateľa
Odosielame za 14-21 dní
9.69
சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சைவப் பெருமக்களுக்கு வேதத்தைப் போன்ற சிறப்புடையன. அவற்றுள்ளும் சைவ சம...

Informácie o knihe

Jazyk
Tamilčina
Väzba
Kniha - Brožovaná
Vydalo
2026
Stránok
92
EAN
9788199853645
ISBN
8199853646
Enbook ID
51250995
Vydavateľ
Hmotnosť
137
Rozmery
152 x 229 x 5

Kompletný popis

சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சைவப் பெருமக்களுக்கு வேதத்தைப் போன்ற சிறப்புடையன. அவற்றுள்ளும் சைவ சமயாசாரியார் நால்வரும் அருளிய எட்டுத் திருமுறைகள் அடிக்கடி பயிலப் பெறுவன. அவற்றுள்ளும் மூவர் தேவாரம் பலவகைப் பண்ணோடு அமைந்தமையால் திருக்கோயில்களில் விரிவாக ஒதப் பெறுகின்றன. ஆகையால் சைவத் திருமுறைகள் என்று சொல்லும் வழக்கு அதிகமாகக் காதில் விழுவதில்லை; தேவார திருவாசகமென்றே மிகுதியாகப் பேசுகிறார்கள்.

தேவாரத் திருப்பதிகங்களிற் பெரும்பாலானவை சிவத் தலங்களைப் பற்றியவை. அவ்வத்தலத்தில் அதற்குரிய தேவாரத்திற்குத் தலைமை இருப்பது இயல்பு. இதனால் எல்லாத் தலங்களின் தேவாரங்களும் அடிக்கடி ஓதப் பெறுகின்றன.

திருஞான சம்பந்தப் பெருமான் முருகப் பிரானுடைய திருவவதாரம் என்ற ஒரு கொள்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது. சேக்கிழார் தம்முடைய பெரிய புராணத்தில் அப்படிக் கூறவில்லை. சிவபெருமானுடைய பிள்ளையார் என்று குறிப்பிப்ப துண்டு.

உமா தேவியாரின் ஞானப்பாலுண்டது பற்றி வந்த வழக்கென்றும், அதனால் ஆளுடைய பிள்ளையாரென்ற திருநாமம் அப்பெருமானுக்கு வந்ததென்றும் அதற்குக் காரணம் கூறுவர். ஆனால் சேக்கிழார் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவராகிய ஒட்டக் கூத்தர் திருஞான சம்பந்தர் முருகனுடைய திருவவதாரமென்றே சொல்கிறார்.

Zákazníci, ktorí si kúpili túto knihu, kúpili tiež

En marxa

Equipo de Redacción de Susaeta
11.55